Feb 13th, 2008
உன் பெயர்
உன் பெயர்
எழுதினாலும் இன்பம்
எழுதிய பின்
உணர்கிறேன்
உன் பெயர்
எழுதினாலும் இன்பம்
எழுதிய பின்
உணர்கிறேன்
உன்னைப் பார்த்த பின்
காதல் உண்மையானது
காமம் அழகானது
பாடல் இனிமையானது
படங்கள் நிசமானது
தனிமை தவிப்பானது
துணை உறுதியானது
வாழ்க்கை சுவையானது
மகிழ்ச்சி நிலையானது
எதிர்பார்ப்பு எழிமையானது – நீ
எனக்குத் தேவையானது
2008/01/31
இன்னும் வருங்கால மனைவியை நேரில் பார்க்கவில்லை!
கடவுள் வந்து என்னைக் கேட்டார்
கவிதையா? கை பிடித்தவளா?
கைப்பிடித்தவளுக்கு கவிதை என்றேன்
கவிதையோடு அவளையும் விட்டுச் சென்றார்
நான் காதலித்தேன்; கவிதை எழுத
எழுதியது நிலைத்தது.
கவிதை எழுதினேன் உனக்காக
நிலைத்தது அனைத்தும்.
2008/01/08
கூடாத சொல் கூட – நீ
கூறுகையில் இனிக்குதடி
2008/01/03
I love you more than you’ll ever know – I know
You love me more than you’ll ever show
2008/01/01
My fiancé wrote these lines. I made the title.
உன் காதலில் தோற்றுப் போனது
பாவமாய் இருக்கிறது
கொஞ்சமாவது அனுமதியேன்
2007/12/28
நான் பாவம்
ஒரு இராட்சசியின் பிடியில் சிக்கித் தவித்தேன்
புதியதொரு குட்டிச் சாத்தானைக் கொண்டுவர
2007/12/27
கெட்ட வார்த்தையில் திட்டுகிறேன் என்று எண்ண வேண்டாம். அன்போடு கூப்பிடுகிறேன்.
உருவமில்லா கடவுளுக்கும்
நேர்மையில்லா காதலிக்கும்
அன்பில்லா காதலிக்கும்
ஏமாற்றுக் காதலிக்கும்
விருப்பமில்லா காதலிக்கும்
விளையாட்டுக் காதலிக்கும்
காதலிக்கும் தோழமைக்கும்
வாழ்க்கையின் வளிகாட்டிக்கும்
காமனவன் விளையாட்டுக்கும்
சோகத்தின் வெளிப்பாட்டுக்கும்
அழகின் வர்ணிப்புக்கும்
சிரிப்பின் சந்தோசத்துக்கும் – ஒரு கவிதை
ஆனால் உனக்கு மட்டும் ஒரு கவிதை,
முடியவில்லையே என் மனைவியே
நம் காதல்
உண்மையானதாலா
2007/12/10
எனது முதற் கவிதை; என் நிச்சயமான மனைவிக்கு. வேலையில் எழுதியது.
இறுதி வரியை “உன்னுள் நான் என்னுள் நீ என்பதாலா?” என்றும் முடித்திருக்கலாம்.
I am the dark
Within night
You are the light
Within day
I am the breeze
Within wind
You are the rebel
Within me
I am the peace
Within you