Apr 28th, 2008
கமராவானால்
என் கண்கள் கமராவானால்
உன்னை, நித்தம் கண்ணடித்திருப்பேன்
என் கண்கள் கமராவானால்
உன்னை, நித்தம் கண்ணடித்திருப்பேன்
கண்ணால் அடிபட்டு
வாயால் வாக்கு வாதப்பட்டு
கைகலப்பு ஏற்பட்டு
உன் தேகம் கைப்பற்றி
மனம் அதை மாற்றி
நெஞ்சத்தைக் கொள்ளையடித்து
கர்ப்பத்துள் குடியேற்றி
வாரிசை உருவாக்கி
ராச்சியத்தைக்…
கட்டி ஆளப் போறேனடி.
Fight
Talk
Peace
Ownership
Convert religion
Steal natural resources
Slavery/ Migration
Have children
Rule the empire
அபிராமி
உன்
பெயர் சிவனின் சக்தி
முகம் விஷ்ணுவின் லக்சுமி
குணம் ராமனின் சீதை
அழகு காமனின் ரதி
அறிவு பிரம்மனின் சரஸ்வதி
நீ
என் அபிராமி
January 12, 2008
உன் நித்திரையைக் களவெடுத்து – என்
கண்ணுக்குள் வைத்துக்கொண்டேன்
உன் இதயம் என்னிடத்தில்
நிம்மதியாக உறங்கட்டும் என்று.
கடலில் நதி
உடலில் உயிர்
நடையில் குணம்
தடையில் முயற்சி
விடையில் தெளிவு
படையில் வீரம்
உடையில் அழகு
கொடையில் மகிழ்ச்சி
மடலில் எழுத்துப் போல் – தமிழில்
நீ சங்கமம்!
“சங்கமம்” என்னும் இணையத் தளத்தின் உத்தியோகபூர்வ கவிதையாக எழுதியது (சிறு மாற்றத்துடன்).

ஒரு திரையிசைப் பாடல் வரியிலிருந்து பிறந்த கவிதை.

அழகான பெண்ணைப் பார்த்ததும் – என் கண்
என்னையறியாமல் தவிக்கின்றதே.
கண்ணை ஏன் அடித்தீர்கள்?
நான் எழுதிய
கவிதைகள் எல்லாம் – உனக்காகத்தானே
நான் எழுதி முடித்ததும் – என்னை
ஏன் தூக்கி எறிந்துவிட்டாய்?
பேனை பேசினால்!
வேறு தலைப்புத் தான் முதலில் வைத்திருந்தேன். இத் தலைப்பு பொருத்தமாக இருப்பதனால், தலைப்பை மாற்றிவிட்டேன்.