கமராவானால்
Monday, April 28th, 2008என் கண்கள் கமராவானால்
உன்னை, நித்தம் கண்ணடித்திருப்பேன்
என் கண்கள் கமராவானால்
உன்னை, நித்தம் கண்ணடித்திருப்பேன்
கண்ணால் அடிபட்டு
வாயால் வாக்கு வாதப்பட்டு
கைகலப்பு ஏற்பட்டு
உன் தேகம் கைப்பற்றி
மனம் அதை மாற்றி
நெஞ்சத்தைக் கொள்ளையடித்து
கர்ப்பத்துள் குடியேற்றி
வாரிசை உருவாக்கி
ராச்சியத்தைக்…
கட்டி ஆளப் போறேனடி.
Fight
Talk
Peace
Ownership
Convert religion
Steal natural resources
Slavery/ Migration
Have children
Rule the empire
உன் நித்திரையைக் களவெடுத்து - என்
கண்ணுக்குள் வைத்துக்கொண்டேன்
உன் இதயம் என்னிடத்தில்
நிம்மதியாக உறங்கட்டும் என்று.
கடலில் நதி
உடலில் உயிர்
நடையில் குணம்
தடையில் முயற்சி
விடையில் தெளிவு
படையில் வீரம்
உடையில் அழகு
கொடையில் மகிழ்ச்சி
மடலில் எழுத்துப் போல் - தமிழில்
நீ சங்கமம்!
“சங்கமம்” என்னும் இணையத் தளத்தின் உத்தியோகபூர்வ கவிதையாக எழுதியது (சிறு மாற்றத்துடன்).
Bad Behavior has blocked 31 access attempts in the last 7 days.