Oct 19th, 2006
New Girl
Since you said
We can never be together
I tried to search
A girl like you
I thought I found her
But just when I heard
That my heart doesn’t accept
Any newcomers…
I realized how much I love you
18/10/2003
Since you said
We can never be together
I tried to search
A girl like you
I thought I found her
But just when I heard
That my heart doesn’t accept
Any newcomers…
I realized how much I love you
18/10/2003
உனது வார்த்தை ஒவ்வொன்றும்
என் இதயம் துளைக்கிறதே – ஏன்
நீ காதல் ஆயுதத்தால் சுட்டாயோ?
சுட்டேன் உன்னை
என் மனதுக்குள் – என்னை
விட்டுப் பிரியாதே என்னும்
ஆத்திரத்தில்
சுடுவேனா…
உனக்காக
நான் வருந்தி எழுதியதை?
பெண்: எங்கே இந்தக் கவிதைகளைச் சுட்டாய்?
என்ன பாவம் செய்தனோ
உன்னை சந்திப்பதற்கு
சேரமுடியாமல் பிரிவதற்கா – நான்
என்ன பாவம் செய்தனோ
தெரிந்திருந்தும்
தெரியாமல் கேட்கிறாயே
என்னைப் பிரிவதற்கா – நான்
என்ன பாவம் செய்தனோ
பெண்ணில் பிடித்த எல்லாம்
உன்னில் இருக்க
உன்னை விட்டுப் பிரிவதற்கா – நான்
என்ன பாவம் செய்தனோ
செய்த தானம்
போதாதென்பதால்
நம்மை வருத்திப் பிரிவதற்கா – நான்
என்ன பாவம் செய்தனோ
எல்லாப் பாவமும்
கூட்டுச் சேர்ந்து நாம்
இணையாமல் பிரிவதற்கா – நான்
என்ன பாவம் செய்தனோ
செவ்வாய் கெடுக்கிறான்
சாதகத்தில் வந்து
பொருந்தாமல் பிரிவதற்கா – நான்
என்ன பாவம் செய்தனோ
சனியன் தண்டனை கொடுக்கிறான்
குடும்பத்தில் பிரச்சனை செய்து
பிடிக்காமல் பிரிவதற்கா – நான்
என்ன பாவம் செய்தனோ
11/09/2005

படத்தைப் பார்த்த பின் தான் கவிதை எழுதினேன்.
‘துக்கம்’ என்னும் வார்த்தை – உன்னை
மீண்டும் கண்டபோது
ஞாபகம் வந்தது!
துக்கத்தில் எழுதவில்லை.
காதலுக்கு கண் இல்லை.
என்
முதற் காதலியே…
உன்
முதற் பழக்கத்திலேயே
என்னை
முழுமையாகக் கொள்ளையடித்தவளே.
உன்னைப்போல் – ஒவ்வொருத்தியும்
அப்படியே இருக்கமாட்டாளா என்று
முத்தமிட்டுப் பார்க்கின்றேன்!
முடியாமல் இருக்கிறதே
உன்னை
முழுமையாய் மறப்பதற்கு
எத்தனை பழிகள்
எத்தனை பாவங்கள்
சொல்லியும் திருந்தவில்லை
சொல்லாமலும் திருந்தவில்லை
வஞ்சித்தும் பார்த்தேன் – பல
பாவையர் உள்ளங்களை!
மிஞ்சியும்தான் பார்த்தேன் – மேல் நாட்டுப் பாணிகளை!
முடியாமல் இருக்கிறதே
உன்னை
முழுமையாய் மறப்பதற்கு
உன்னால்
எமாற்றம் எனக்கு – அன்று
என்னால்
ஏமாற்றம் பல பெண்களுக்கு – இன்று்று
அத்தனையும் செய்தேன் – உன்னை
மறக்கும் அவசரத்தில்
எல்லாம் உன்னால் தானேயடி
இருந்தும்
என்னை நானே நோவுகின்றேன்
எப்படியிருந்தாலும்
நான் செய்வதும் பாவம்தானே!
வஞ்சனைக் காரனின் மனசு பேசினால்.