Jun 18th, 2009
வெங்காயம்
நீ
வெங்காயம்
வெட்டும் அழகில்
நான்
கண் கலங்குகிறேன்
I’m actually crying because of onion.
நீ
வெங்காயம்
வெட்டும் அழகில்
நான்
கண் கலங்குகிறேன்
I’m actually crying because of onion.
ஆண் பாதி பெண் பாதி
கலந்து செய்த கலவை நான்
வெளியே ஆண் உள்ளே பெண்
விளங்க முடியாக் கவிதை நான்
ஆணை மாற்றி உணர்வை வென்று
பெண்ணைச் செய்யப் பார்க்கின்றேன்
ஆனால்,
பெண்ணை ஒடுக்கி மனதை மாற்றி
ஆண் மட்டும் வளர்கிறதே
============================
நீ பாதி நான் பாதி
கலந்து செய்த கலவை நான்
வெளியே நான் உள்ளே நீ
விளங்க முடியாக் கவிதை நான்
என்னை வென்று உணர்வால் நின்று
உன்னை செய்யப் பார்க்கின்றேன்
ஆனால்,
உன்னைத் தள்ளி வெகுவாய் வென்று
நான் மட்டும் நிற்கின்றேன்
சுட்டேன் உன்னை
என் மனதுக்குள் – என்னை
விட்டுப் பிரியாதே என்னும்
ஆத்திரத்தில்
சுடுவேனா…
உனக்காக
நான் வருந்தி எழுதியதை?
பெண்: எங்கே இந்தக் கவிதைகளைச் சுட்டாய்?
கருங்கூந்தல் காட்டுக்குள்
காணாமல் போன எனக்கு
கட்டெறும்புப் பாதை காட்டிய – அந்தக்
கண்களைப் பின் தொடர்ந்தேன்
நெடுந்தூரப் பயணத்தில்
களைத்துப் போன என் ஏக்கத்திற்கு
நீ விட்ட மூச்சுக் காற்று
புத்துணர்ச்சியாய் இருந்தது
அலைமோதிக் கொண்டிருந்த இதயத்திற்கு
என் உயிர்க் கப்பலை கரை சேர்த்தது
நீ சிந்தாமல் சிந்திய
ஒரு சொட்டுப் புன்னகை
தவறிப் போன கால்களுக்கு
வழி காட்டிய வட்ட நிலாவோடு
கிட்டப் பேச ஆசைப்பட்டு
எட்டி நடந்த என் கால்களுக்கு
முற்றுப் புள்ளி வைத்துவிட்டானே – அவளின்
மொட்டை அண்ணன்
பெண்ணைப் பின் தொடரும் ஆண்.

மௌனம் மொழிகிறது.
கவிதையே…
உன் மேல் உள்ள காதலால்
நான் காதலிக்கின்றேன் – பெண்களை
அப்போதுதான் கவிதை வரும் என்பதற்காக!
உன்னைக் காதலிக்கவா… நான் கவிதை எழுதுவதற்காக!

ஒரு MSN சம்பாசனை.
எங்கே என் பதில்
தேடித் தேடி அலைந்தேன்
அது உன்னிடத்தில் இல்லை என்று
அவளைப் பார்த்த பின்புதான் தெரிந்துகொண்டேன்!