ஆளவந்தான்
Sunday, May 4th, 2008ஆண் பாதி பெண் பாதி
கலந்து செய்த கலவை நான்
வெளியே ஆண் உள்ளே பெண்
விளங்க முடியாக் கவிதை நான்
ஆணை மாற்றி உணர்வை வென்று
பெண்ணைச் செய்யப் பார்க்கின்றேன்
ஆனால்,
பெண்ணை ஒடுக்கி மனதை மாற்றி
ஆண் மட்டும் வளர்கிறதே
============================
நீ பாதி நான் பாதி
கலந்து செய்த கலவை நான்
வெளியே நான் உள்ளே நீ
விளங்க முடியாக் கவிதை நான்
என்னை வென்று உணர்வால் நின்று
உன்னை செய்யப் பார்க்கின்றேன்
ஆனால்,
உன்னைத் தள்ளி வெகுவாய் வென்று
நான் மட்டும் நிற்கின்றேன்
