May 25th, 2008
என் தாயே
என் தலையாய கடமை
உன்னை
நீயாக வைத்திருப்பது
என் வருங்கால மனைவிக்காக எழுதியது.
Love the way she is; Should keep her how she is now, forever.
என் தலையாய கடமை
உன்னை
நீயாக வைத்திருப்பது
என் வருங்கால மனைவிக்காக எழுதியது.
Love the way she is; Should keep her how she is now, forever.
உன் மேல்
கவிதை எழுதினேன்
காதல் வந்ததால்
காதல் வந்ததால்
உன் சொல் கூட
கவிதை ஆனதே.
அடடா,
இதையும் ஏற்கனவே எழுதி விட்டார்களே!
உன் பெயர்
எழுதினாலும் இன்பம்
எழுதிய பின்
உணர்கிறேன்
உன்னைப் பார்த்த பின்
காதல் உண்மையானது
காமம் அழகானது
பாடல் இனிமையானது
படங்கள் நிசமானது
தனிமை தவிப்பானது
துணை உறுதியானது
வாழ்க்கை சுவையானது
மகிழ்ச்சி நிலையானது
எதிர்பார்ப்பு எழிமையானது – நீ
எனக்குத் தேவையானது
2008/01/31
இன்னும் வருங்கால மனைவியை நேரில் பார்க்கவில்லை!
கடவுள் வந்து என்னைக் கேட்டார்
கவிதையா? கை பிடித்தவளா?
கைப்பிடித்தவளுக்கு கவிதை என்றேன்
கவிதையோடு அவளையும் விட்டுச் சென்றார்
கூடாத சொல் கூட – நீ
கூறுகையில் இனிக்குதடி
2008/01/03
உன் காதலில் தோற்றுப் போனது
பாவமாய் இருக்கிறது
கொஞ்சமாவது அனுமதியேன்
2007/12/28
நான் பாவம்
ஒரு இராட்சசியின் பிடியில் சிக்கித் தவித்தேன்
புதியதொரு குட்டிச் சாத்தானைக் கொண்டுவர
2007/12/27
கெட்ட வார்த்தையில் திட்டுகிறேன் என்று எண்ண வேண்டாம். அன்போடு கூப்பிடுகிறேன்.
உருவமில்லா கடவுளுக்கும்
நேர்மையில்லா காதலிக்கும்
அன்பில்லா காதலிக்கும்
ஏமாற்றுக் காதலிக்கும்
விருப்பமில்லா காதலிக்கும்
விளையாட்டுக் காதலிக்கும்
காதலிக்கும் தோழமைக்கும்
வாழ்க்கையின் வளிகாட்டிக்கும்
காமனவன் விளையாட்டுக்கும்
சோகத்தின் வெளிப்பாட்டுக்கும்
அழகின் வர்ணிப்புக்கும்
சிரிப்பின் சந்தோசத்துக்கும் – ஒரு கவிதை
ஆனால் உனக்கு மட்டும் ஒரு கவிதை,
முடியவில்லையே என் மனைவியே
நம் காதல்
உண்மையானதாலா
2007/12/10
எனது முதற் கவிதை; என் நிச்சயமான மனைவிக்கு. வேலையில் எழுதியது.
இறுதி வரியை “உன்னுள் நான் என்னுள் நீ என்பதாலா?” என்றும் முடித்திருக்கலாம்.
என்னை என்னுள் தேடினேன்
உன்னைக் கண்டதும் முற்றுப்பெற்றது