CAPitalZ

வழிகாட்டி

கருங்கூந்தல் காட்டுக்குள்
காணாமல் போன எனக்கு
கட்டெறும்புப் பாதை காட்டிய – அந்தக்
கண்களைப் பின் தொடர்ந்தேன்

நெடுந்தூரப் பயணத்தில்
களைத்துப் போன என் ஏக்கத்திற்கு
நீ விட்ட மூச்சுக் காற்று
புத்துணர்ச்சியாய் இருந்தது

அலைமோதிக் கொண்டிருந்த இதயத்திற்கு
என் உயிர்க் கப்பலை கரை சேர்த்தது
நீ சிந்தாமல் சிந்திய
ஒரு சொட்டுப் புன்னகை

தவறிப் போன கால்களுக்கு
வழி காட்டிய வட்ட நிலாவோடு
கிட்டப் பேச ஆசைப்பட்டு
எட்டி நடந்த என் கால்களுக்கு
முற்றுப் புள்ளி வைத்துவிட்டானே – அவளின்
மொட்டை அண்ணன்

 

 

பெண்ணைப் பின் தொடரும் ஆண்.

Leave a Reply


நீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.
நீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.
கசடு எதிர்மறை (Anti-Spam) படம்