என் தாயே

May 25th, 2008 by capitalz

என் தலையாய கடமை
உன்னை
நீயாக‌ வைத்திருப்பது

என் வருங்கால மனைவிக்காக எழுதியது.
Love the way she is; Should keep her how she is now, forever.

ஆளவந்தான்

May 4th, 2008 by capitalz

ஆண் பாதி பெண் பாதி
கலந்து செய்த கலவை நான்
வெளியே ஆண் உள்ளே பெண்
விளங்க முடியாக் கவிதை நான்
ஆணை மாற்றி உணர்வை வென்று
பெண்ணைச் செய்யப் பார்க்கின்றேன்
ஆனால்,
பெண்ணை ஒடுக்கி மனதை மாற்றி
ஆண் மட்டும் வளர்கிறதே

============================

நீ பாதி நான் பாதி
கலந்து செய்த கலவை நான்
வெளியே நான் உள்ளே நீ
விளங்க முடியாக் கவிதை நான்
என்னை வென்று உணர்வால் நின்று
உன்னை செய்யப் பார்க்கின்றேன்
ஆனால்,
உன்னைத் தள்ளி வெகுவாய் வென்று
நான் மட்டும் நிற்கின்றேன்

காதல் வந்தால்

May 2nd, 2008 by capitalz

உன் மேல்
கவிதை எழுதினேன்
காதல் வந்ததால்
காதல் வந்ததால்
உன் சொல் கூட‌
கவிதை ஆனது.
அடடா,
இதையும் ஏற்கனவே சொல்லி விட்டார்களே!

கமராவானால்

April 28th, 2008 by capitalz

என் கண்கள் கமராவானால்
உன்னை, நித்தம் கண்ணடித்திருப்பேன்

திருமணம்

April 27th, 2008 by capitalz

கண்ணால் அடிபட்டு
வாயால் வாக்கு வாத‌ப்பட்டு
கைகலப்பு ஏற்பட்டு
உன் தேக‌ம் கைப்பற்றி
மனம் அதை மாற்றி
நெஞ்சத்தைக் கொள்ளையடித்து
கர்ப்பத்துள் குடியேற்றி
வாரிசை உருவாக்கி
ராச்சியத்தைக்…
கட்டி ஆளப் போறேனடி.

Fight
Talk
Peace
Ownership
Convert religion
Steal natural resources
Slavery/ Migration
Have children
Rule the empire


Bad Behavior has blocked 15 access attempts in the last 7 days.