எதெதெற்கோ கவிதை எழுதினேன்
உனக்கு மட்டும் வருதில்லையே
என்னை ஏங்க வைக்காமல் இருந்ததற்கா?
நான் பார்க்காத அன்பு காட்டி
எனை ஏன் மறக்க வைத்தாய்?
நான் கேட்காத பாசம் தந்து
எனை ஏன் பிரகாசிக்க வைத்தாய்?
நான் நினைக்காத குடும்பம் காட்டி
எனை ஏன் இலயிக்க வைத்தாய்?
நான் ஏங்காத காதல் செய்து
எனை ஏன் ஏங்காமல் வைத்தாய்?
பார் [world] கேட்டதெல்லாம்,
கேட்காமல் கிடைப்பதால்
உனக்காக கவிதை ஒன்றும் வருகுதில்லையே
நீயே தான் குற்றவாளி
நீதிபதியே,
என் இயலாமைக்கு
இவள் மேல் தான் குற்றம்.
கணவனின் தலையாய கடமையாக – நான்
குறைந்த பட்சம்
ஒரு கவிதையாவது எழுதிக் கொடுக்கவில்லை.
எனை ஏங்க வைக்காமல் கதலித்ததால்
அவள் என்னை விட அன்பு காட்டியதால்
அழகிய குடும்பம் ஒன்றை ஆசையாக கட்டியதால்
நான் கேட்டதெல்லாம்,
கேட்காமலே கிடைக்கச் செய்ததால்
எங்கு போவது – நான்
எங்கித் தவித்து
மனம் உருகி ஒரு காதல் கவிதை எழுத.
உன்னைப் பிடித்த பின்
காதல் பிடிக்கிறது.
நீ நெருப்பு
நான் ஆதிவாசி
சுடுபட்டு சுடுபட்டு – உன்னை
கையாளக் கற்றுக்கொள்கிறேன்
நான் சமைத்த முதல் உணவு – அஞ்சனா
குட்டி அம்மன் மூலம் contacts எடுத்து
மணமகள் தேவை என்னும் job posting பார்த்து
“அபிராமி” என்னும் resume பெயர் சொல்லி
அழகான முகம் interview காட்டி
சாதகங்களை reference விசாரித்து
ஜெயம் அண்ணாவிடம் security clearance பெற்று
நான் கொடுத்த job offer ஐ
நீ accept பண்ணி
2008ம் ஆண்டு நாம் தொடங்கிய project
1 1/2 வருடத்தில் bonus ஆக ஓவியாவை அளித்தது.
ஓவியா நம் மகள்
நீ
வெங்காயம்
வெட்டும் அழகில்
நான்
கண் கலங்குகிறேன்
I’m actually crying because of onion.
Never say never
but women women women
I can never understand them.
O my Lord,
How did you?
“Never”
The God replied “Never”.
December 06, 2008
என் தலையாய கடமை
உன்னை
நீயாக வைத்திருப்பது
என் வருங்கால மனைவிக்காக எழுதியது.
Love the way she is; Should keep her how she is now, forever.